TNPSC Thervupettagam
April 3 , 2021 1520 days 837 0
  • தனித்துவ நிலப்பரப்பு அடையாள எண் (Unique Land Parcel Identification Number – ULPIN) என்ற ஒரு திட்டமானது இந்த ஆண்டு 10 மாநிலங்களில் தொடங்கப் பட்டுள்ளது.
  • இது 2022 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் தொடங்கப்படும்.
  • 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டிஜிட்டல் ரீதியில் இந்திய நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் (DILRMP) ஓர் அங்கமாக மக்களவையில் பாராளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த ஒரு அறிக்கையில் இத்திட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு 14 இலக்க அடையாள எண் வழங்கப்படும்.
  • இது “நிலத்திற்கான ஆதார்” எனவும் கூறப்படுகிறது.
  • இந்த எண் கணக்கெடுக்கப்பட்ட ஒவ்வொரு நிலத்தையும் அடையாளம் காணவும் இந்தியக் கிராமப்புறப் பகுதிகளில் பொதுவாக நிலவும் நில மோசடிகளைத் தடுக்கவும் உதவும்.
  • இந்திய கிராமப்புறப் பகுதிகளில் நில ஆவணங்கள் காலாவதியான மற்றும் சர்ச்சைக்குரியவையாக உள்ளது.
  • இதில் அடையாளம் காணும் முறையானது நிலப்பரப்பின் அட்ச மற்றும் தீர்க்க ரேகையின் அடிப்படையிலானதாகும்.
  • மேலும் இது விரிவானக் கணக்கெடுப்பு மற்றும் புவிசார் நில அளவைப் படத்தை பொருத்ததாகும்.

பலன்கள்

  • இந்த மூல ஆவணம் நில உரிமையை அங்கீகரிக்க உதவும்.
  • இது சந்தேகத்திற்குரிய நில உரிமை கோரிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
  • இது அரசு நிலங்களை எளிதில் அடையாளம் காண உதவும்.
  • இது தகாத முறையிலான நிலப் பரிவர்த்தனைகளிலிருந்து நிலத்தைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்