ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் UN80 முன்னெடுப்பினைத் தொடங்கி வைத்தார்.
தற்போதைய உலகளாவியச் சவால்களை எதிர்கொள்வதற்காக என ஐக்கிய நாடுகள் சபையினை நவீனமயமாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமைதி, மேம்பாடு மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றில் ஐ.நா. சபையின் பல பணிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
இது சில நிர்வாகச் சேவைகள் ஒன்றுடன் ஒன்று குறுக்கிடுவதைத் தடுத்து, அவற்றைத் தானியக்க மயமாக்க திட்டமிட்டுள்ளது.
3,600க்கும் மேற்பட்ட ஐ.நா. ஆணைகள் எவ்வாறு செயல்படுத்தப் படுகின்றன என்பது ஒரு மதிப்பாய்வு மூலம் மதிப்பிடப்படும்.
இந்த முன்னெடுப்பானது பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை மாற்றாது.
UN80 முன்னெடுப்பானது, தானியக்க மயமாக்கல், மதிப்பாய்வு மூலம் செலவினங்கள் மற்றும் ஒன்றுடன் ஒன்று குறுக்கிடுதலைக் குறைத்தல் போன்ற மூன்று முக்கியப் பணி நிலையங்களில் கவனம் செலுத்துகிறது.