UNCTAD நுகர்வோர் பாதுகாப்பு நிபுணர்கள் அமர்வு - இந்தியா
July 10 , 2026 19 days 89 0
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டினால் (UNCTAD) ஏற்பாடு செய்யப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் கொள்கை குறித்த நிபுணர்களின் அரசுகளுக்கிடையேயான குழுவின் (IGE) ஒன்பதாவது அமர்வின் தலைவராக இந்தியா நியமிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கட்டமைப்பான நுகர்வோர் பாதுகாப்பிற்கான ஐக்கிய நாடுகளின் வழிகாட்டுதல்கள் (UNGCP) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதில் நாடுகளுக்கு வழி காட்டுகிறது.
1985 ஆம் ஆண்டில் ஏப்ரல் 16 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் (UNGA) 39/248 தீர்மானத்தின் மூலம் UNGCP முதன்முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் இது 1999 ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டு 2015 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது.
இது நுகர்வோர் உரிமைகள், தயாரிப்பு பாதுகாப்பு, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளிலிருந்து பாதுகாப்பு, நுகர்வோர் கல்வி, டிஜிட்டல் வர்த்தக பாதுகாப்பு மற்றும் நிலையான நுகர்வு ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
ஒரு பிணைப்பற்ற மென்மையான சட்டக் கருவியான UNGCP நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான உலகளாவிய கட்டமைப்பை வழங்குகிறது.