TNPSC Thervupettagam

UPI பரிவர்த்தனைகளின் செறிவு

October 9 , 2025 3 days 38 0
  • தெலுங்கானா மாநிலமானது, அனைத்து இந்திய மாநிலங்களிலும் அதிக தனிநபர் ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுகம் (UPI) சார்ந்த பரிவர்த்தனை செறிவினைக் கொண்டுள்ளது.
  • கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா ஆகியவற்றில் நகர்ப்புற மையங்கள் மற்றும் பொருளாதார மையங்களால் இயக்கப்படும் அதிக UPI பயன்பாட்டுச் செறிவுகள் பதிவாகியுள்ளன.
  • பணத் தேவையில் ஏற்பட்ட குறைவுடன் தொடர்புடைய UPI பயன்பாட்டின் அதிகரிப்பு ஆனது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக ATM பணம் எடுத்தல் நடவடிக்கையில் நிலையான வீழ்ச்சியால் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 2024–25 ஆம் ஆண்டில் புழக்கத்தில் உள்ள பண மதிப்பு (CIC) ஆனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.2 சதவீத பங்கைக் கொண்டிருந்தது.
  • 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முதல் முறையாக UPI பரிவர்த்தனை 20 பில்லியனைத் தாண்டியது.
  • அளவு சார்ந்து 80% பரிவர்த்தனைகளுடன் UPI பயன்பாடு ஆனது 10 மாநிலங்களில் அதிகமாக உள்ளது.
  • தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் பயன்பாட்டுச் செறிவு அதிகமாக உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்