இந்தியத் தேசியப் பணவழங்கீட்டுக் கழகம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை இணைந்து தொலைதொடர்புத் துறைக்கான UPI AUTOPAY என்ற ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளன.
இதன்மூலம், இந்தியத் தேசியப் பணவழங்கீட்டுக் கழகத்தினால் தொடங்கப்பட்ட ஒரு தனித்துவமிக்க கட்டாயப் படுத்தப் பட்ட இணைய அம்சத்துடன் உள்ள முதல் தொலை தொடர்பு நிறுவனமாக இது மாறியுள்ளது.
இந்தியத் தேசியப் பணவழங்கீட்டுக் கழகத்தினால் தொடங்கப்பட்ட UPI AUTOPAY அமைப்பைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் இப்போது கைபேசிக் கட்டணங்கள், மின்சாரக் கட்டணங்கள், மாதத் தவணைகள் போன்ற அடிக்கடி செலுத்த வேண்டியக் கட்டணங்களை UPI செயலியைப் பயன்படுத்திச் செலுத்தலாம்.
இதில் ரூ.5000 வரையிலான மறு மதிப்பேற்றத் தொகைகளுக்கு வாடிக்கையாளர் UPI PIN என்ற ஒரு எண்ணை உள்ளீடு செய்யத் தேவையில்லை.