TNPSC Thervupettagam

UPI மற்றும் Fawri+ இணைப்பு

November 19 , 2025 9 days 42 0
  • Fawri+ சேவை மூலம் பஹ்ரைனின் மின்னணு நிதி பரிமாற்ற அமைப்புடன் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகத்தினை (UPI) இணைக்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் மற்றும் பஹ்ரைனின் BENEFIT ஆகியவை கூட்டு சேர்ந்துள்ளன.
  • இந்த அமைப்பு ஆனது இரு நாடுகளிலும் உள்ள பயனர்கள் RBI மற்றும் பஹ்ரைன் மத்திய வங்கியின் வழிகாட்டுதலின் கீழ் உடனடியாகவும் பாதுகாப்பாகவும் பணத்தை அனுப்பவும் பெறவும் அனுமதிக்கும்.
  • இந்த ஒத்துழைப்பு 2019 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் 2024 ஆம் ஆண்டு இந்தியா-பஹ்ரைன் உயர் கூட்டு ஆணையக் கூட்டத்தின் போது செய்யப்பட்ட உறுதி மொழிகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் கூட்டாண்மையானது, பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் என்பதோடு, நிதி உள்ளடக்கத்தை ஆதரிக்கும் மற்றும் மக்களிடையேயான இணைப்பை ஆழப் படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்தியாவிற்கும் பஹ்ரைனுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் ஆனது 2024 முதல் 2025 ஆம் ஆண்டு வரை 1.64 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்