ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) இந்தியாவில் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தது.
UPI ஆனது 2016 ஆம் ஆண்டில் இந்தியத் தேசிய கொடுப்பனவுக் கழகத்தால் (NPCI) தொடங்கப் பட்டது.
ஆண்டு UPI பரிவர்த்தனைகள் 2016-17 ஆம் நிதியாண்டில் 1.78 கோடியிலிருந்து 2025-26 ஆம் நிதியாண்டில் 24,162 கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது, இது 13,000 மடங்கு உயர்வாகும்.
பரிவர்த்தனை மதிப்பு ₹0.07 லட்சம் கோடியில் இருந்து சுமார் ₹314 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதுடன் இது 4,000 மடங்குக்கும் அதிகமான வளர்ச்சியாகும்.
தற்போது ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், பூட்டான், இலங்கை, நேபாளம், சிங்கப்பூர், மொரிஷியஸ், கத்தார், கம்போடியா, கிரீஸ் மற்றும் மாலத்தீவு ஆகிய 11 நாடுகளில் UPI செயல்பட்டு வருகிறது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) UPI-ஐ பரிவர்த்தனை அளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நிகழ்நேர கட்டண அமைப்பாக அங்கீகரித்துள்ளது.