கேரள மாநில மின்சார வாரியம் (KSEB) மற்றும் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT மும்பை) ஆகியவை மாநிலம் முழுவதும் வாகனத்திலிருந்து மின் கட்டமைப்பிற்கு (V2G) மின் மாற்றும் தொழில்நுட்பத்தினை செயல்படுத்துவதை ஆராய்வதற்காக வேண்டி ஒரு சோதனைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
V2G என்பது மின்சார வாகனங்களின் மின் கலங்கள் மின்சாரத்தினை மீண்டும் அதன் கட்டமைப்பிற்கு அனுப்ப உதவும் தொழில்நுட்பங்களைக் குறிக்கிறது.
ஒரு மின்சார வாகனம் பயன்பாட்டில் இல்லாதபோது, அது ஒரு பரவலாக்கப்பட்ட மின் கல ஆற்றல் சேமிப்புச் சாதனமாகச் செயல்பட முடியும்.
ஒரு செயலற்ற மின்சார வாகனம், இரு திசை மின்னேற்றியுடன் இணைக்கப்படும் போது, மின் விநியோக கட்டமைப்பிற்கு மின்சாரத்தை வழங்க முடியும்.
இதனால், இது இரண்டு முறைமைகளைக் கொண்டுள்ளது:
கட்டமைப்பிலிருந்து வாகனத்திற்கு (G2V): கட்டமைப்பு ஆற்றலைப் பயன்படுத்தி மின்சார வாகனங்களை மின்னேற்றம் செய்தல்.
வாகனத்திலிருந்து கட்டமைப்பிற்கு (V2G): மின்சாரத்தை மீண்டும் மின் கட்டமைப்பிற்கு அனுப்புதல்.
இந்த ஒத்துழைப்பு மின்சார வாகனங்களை (EV) மாநிலத்தின் மின் கட்டமைப்பில் மிக நன்கு ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உச்ச கட்ட மின் தேவையின் போது மின்சாரத்தை வழங்குவதற்காக மின்சார வாகன உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு மற்றும் நெதர்லாந்து முன்னணியில் உள்ளன.