இந்திய விமானப் படையானது இந்தியாவின் 140 போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் நடத்தும் வானூர்திகள் ஆகியவை பங்கு பெற்ற மிகப்பெரிய நடவடிக்கையான எதிரிகளை சுட்டு வீழ்த்தும் செயல் விளக்கத்தை பாகிஸ்தான் எல்லைக்கருகில் இராஜஸ்தானின் பொக்ரானில் நடத்தியது.
இந்த “VAYU SHAKTHI” நடவடிக்கையில் இந்திய விமானப் படையானது குறைவான எடையுள்ள போர் விமானமான தேஜாஸ், மேம்படுத்தப்பட்ட குறைவான எடையுள்ள வானூர்தி, தரையிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் ஆகாஷ் மற்றும் வானிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையான அஸ்த்ரா போன்ற உள்நாட்டு வடிவமைப்புகளின் சுட்டு வீழ்த்தும் திறனை வெளிப்படுத்தியது.