இராணுவப் பயிற்சிப் படைப்பிரிவு மற்றும் காந்திநகரைச் சேர்ந்த தேசியப் பாதுகாப்பு பல்கலைக் கழகம் ஆகியவை, புதுதில்லியில் போர்க்கள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவுவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இத்திட்டத்திற்கு, ஒரு முன்மாதிரியாக 'WARDEC' என பெயரிடப்பட்டது.
இது உருவகப்படுத்துதல் அடிப்படையிலான இந்தியாவின் முதல் பயிற்சி மையமாக இருக்கும்.
இது மெய்நிகர் தோற்றப் போர்க்களம் சார்ந்த விளையாட்டுகளை உருவாக்குவதற்கு செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தும்.