WHO COVID – 19ன் தீவிரத் தன்மையை சீனாவிலிருந்து ஐரோப்பாவிற்கு மாற்றம்
March 17 , 2020 2295 days 760 0
சமீபத்தில் உலக சுகாதார அமைப்பானது கொரோனா வைரஸின் தீவிரத் தன்மையை சீனாவிலிருந்து ஐரோப்பாவிற்கு மாற்றியுள்ளது.
சீனாவில் நோய்த்தொற்றுகளின் வீதம் கட்டுப்படுத்தப் பட்டு வரும் அதே சமயத்தில் ஐரோப்பிய நாடுகளில் இந்த நோய் பாதிப்பானது அதிவேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக அந்த அமைப்பு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மேலும், ஐரோப்பாவில் இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கையானது உலகின் எந்தப் பகுதியையும் விட அதிகமாக உள்ளது.