உலக வானிலை அமைப்பு (WMO) 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய காலநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது என்ற நிலையில் இதில் பூமியின் பருவநிலை "சிவப்பு எச்சரிக்கை"நிலையில் இருப்பதாக எச்சரித்துள்ளது.
பூமியின் ஆற்றல் சமமின்மை 65 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதுஅதாவது விண்வெளிக்கு வெளியேற்றப்படுவதை விட அதிக வெப்பம் பூமியில் சிக்கி உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
கார்பன் டை ஆக்சைடு (CO2), மீத்தேன் (CH4) மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு (N2O) போன்ற பசுமை இல்ல வாயுக்கள் சாதனை அளவில் உயர்ந்துள்ளது புவி வெப்பமடைதலை துரிதப்படுத்துகிறது.
பெருங்கடல்கள் சுமார் 90% உபரி வெப்பத்தை உறிஞ்சும் நிலையில் கடல் வெப்பம் அடைதல், கடல் மட்ட உயர்வு மற்றும் கடல் அமிலமயமாதலுக்கு இது வழிவகுக்கிறது.
உலகளாவிய வெப்பநிலை தொழில்மயமாக்கலுக்கு முந்தைய காலத்தை விட சுமார் 1.43°C அதிகமாக உள்ள நிலையில் இது வெப்ப அலைகள், வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது.
இந்த அறிக்கை சுற்றுச்சூழல் அமைப்புகள், மனித ஆரோக்கியம், வாழ்வாதாரங்கள் மற்றும் உலகளாவியப் பொருளாதார நிலைத்தன்மையின் மீதான கடுமையான தாக்கங்களை எடுத்துக்காட்டுகிறது.