TNPSC Thervupettagam

X-Guard ஒளியிழை மூலம் இணைக்கப்பட்ட ரேடார் ஏய்ப்பு அமைப்பு

August 29 , 2025 24 days 76 0
  • எதிரி நாட்டு ரேடார் மற்றும் எறிகணைகளை குழப்புவதற்காக, இந்திய விமானப் படையானது, சிந்தூர் நடவடிக்கையின் போது ரஃபேல் போர் விமானங்களில் செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்பட்ட X-Guard ஒளியிழை மூலம் இணைக்கப் பட்ட ரேடார் ஏய்ப்பு அமைப்பினைப் பயன்படுத்தியது.
  • இஸ்ரேலின் ரஃபேல் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட X-Guard, ரஃபேலின் ரேடார் மற்றும் மின்னணு அடையாளங்களைப் பிரதிபலிக்கச் செய்து அச்சுறுத்தல் ஆயுதங்களை தவறாக வழிநடத்துகிறது.
  • பாகிஸ்தான் விமானப்படையின் J-10C போர் விமானங்கள் உண்மையான விமானங்களுக்குப் பதிலாக இந்த ஏமாற்று விமானங்களை குறி வைத்து, தவறான தாக்குதலை ஏற்படுத்தின.
  • மேம்பட்ட நுட்பம் கொண்ட எறிகணைகளுக்கு எதிராக பல் அடுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்காக இந்த அமைப்பு ரஃபேலின் SPECTRA மின்னணுப் போர்த் தொகுப்பு அமைப்புடன் செயல்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்