1.11.2019 அன்று இந்தியாவில் ‘YuWaah’ ஜெனரேஷன் அன்லிமிடெட் என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
ஆக்கப்பூர்வமான வாழ்க்கை மற்றும் பணி சார்ந்த எதிர்காலத்திற்கான பொருத்தமான திறன்களைப் பெறுவதற்கு இளைஞர்களுக்கு உதவுவதே YuWaah என்ற முன்னெடுப்பின் நோக்கமாகும்.
YuWaah முன்னெடுப்பில் இளம் வயதுப் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோர் இலக்காக உள்ளவர்கள் ஆவர்.
2018 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் நியூயார்க்கில் தொடங்கப்பட்ட உலகளாவிய ஜெனரேஷன் அன்லிமிடெட் இயக்கத்துடன் இணைக்கப்பட்ட தனது தேசிய முயற்சியைத் தொடங்கிய உலகின் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.