ஃபிட் இந்தியா (ஆரோக்கியமான இந்தியா) முன்னெடுப்பு - தில்லி
February 27 , 2020 2373 days 973 0
இந்திய ரயில்வேத் துறையானது புது தில்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் ஒரு குந்து இயந்திரத்தை நிறுவியுள்ளது.
நாட்டில் முதன்முறையாக தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில், மூன்று நிமிடங்களில் 30 குந்துகைகள் செய்யும் ஒருவர் நடைமேடைக்கான அனுமதிச் சீட்டுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை.