ஃபுடலா ஏரி தொடர்பான மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
ஃபுடலா ஏரி ஆனது குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத்திற்காக கட்டமைக்கப்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு நீர்நிலை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2017 ஆம் ஆண்டு ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளின் 2(1)(g) வது விதியின் கீழ் இந்த ஏரி ஈரநிலமாக தகுதி பெறவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
21வது சரத்தின் கீழ் பொது நம்பிக்கை மற்றும் ஆரோக்கியமானச் சூழலுக்கான அரசியலமைப்பு உரிமையின் கோட்பாட்டை இந்தத் தீர்ப்பு வலியுறுத்தியது.
தெலுங்கெடி குளம் என்றும் அழைக்கப்படும் மகாராஷ்டிராவின் ஃபுடலா ஏரியானது , 1799 ஆம் ஆண்டு அப்போதைய நாக்பூரின் ஆட்சியாளரால் அப்பகுதியின் நீர்ப்பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுமார் 200 ஹெக்டேர் நீர்ப்பிடிப்புப் பகுதியுடன் கட்டமைக்கப்பட்டது.