அகமதாபாத்திலிருந்து இலண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு AI171 என்ற பெயரில் இயக்கப்படும் ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஆனது 2025 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதியன்று விபத்துக்குள்ளானது.
இதில் விமானிகள் புறப்பட்ட உடனேயே உயிருக்கு ஆபத்து என்ற அவசரநிலையைக் குறிக்கின்ற 'Mayday' என்ற சமிக்ஞையை விடுத்தனர்.
இந்த போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் ஆனது, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து ஐக்கியப் பேரரசின் இலண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா நிறுவனத்தினால் இயக்கப் பட்டது.
2011 ஆம் ஆண்டில் இது அறிமுகப் படுத்தப் பட்டதிலிருந்து போயிங் 787 தொடர்பாக ஏற்பட்ட உயிரிழப்பினை ஏற்படுத்திய முதல் விபத்து இது என்பதோடு மேலும் முழு விமானமும் சேதமடைந்த முதல் விபத்து இதுவேயாகும்.
மேலும், 1985 ஆம் ஆண்டில் ஏர் இந்தியா 182 என்ற விமானத்தின் குண்டுவெடிப்பில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் முழுவதும் சேதமடைந்த முதல் விபத்திற்குப் பிறகு ஏற்பட்ட முதல் விபத்து இதுவாகும்.
இது இந்தியாவின் விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகவும் மோசமான ஒரே விமான விபத்து ஆகும்.
1996 ஆம் ஆண்டு சர்கி தாத்ரி விமானம் நடுவானில் மோதியதில் சவுதியா போயிங் 747 விமானம் விபத்துக்குள்ளான 29 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் நடந்த முதல் பெரிய விமானத்தின் விபத்து இதுவாகும்.
2009 ஆம் ஆண்டில் விமானச் சேவையில் இணைக்கப்பட்டத்திலிலிருந்து ட்ரீம்லைனர் விமானத்தின் முதல் விபத்து இதுவாகும்.
இந்த விபத்து குறித்து இந்திய விமான விபத்துப் புலனாய்வு வாரியத்தினால் (AAIB) விசாரிக்கப்பட்டு வருகிறது.
விமான விபத்துப் புலனாய்வு வாரியம் (AAIB) என்ற அமைப்பு சிவில் / பொது விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒரு பிரிவாகும்.
இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஆணையமான பொது விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) மற்றும் ஏர் இந்தியா ஆகியவை இந்த விபத்து குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
சிவில்/பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) என்பது இந்தியாவில் பொது விமானப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான இந்திய அரசாங்கத்தின் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
இது 2020 ஆம் ஆண்டு விமான (திருத்தம்) சட்டத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக மாறியது.
ஹரியானாவின் குருகிராமில் தலைமையிடத்தினைக் கொண்டுள்ள இது விமான விபத்துக்கள் மற்றும் இதர சம்பவங்களை விசாரிப்பதோடு, விமானப் போக்குவரத்து தொடர்பான அனைத்து விதமான விதிமுறைகளையும் பேணுகிறது மற்றும் விமானப் போக்குவரத்து தொடர்பான அனைத்து உரிமங்களை வழங்கச் செய்வதற்குமான ஒரு பொறுப்பினையும் கொண்டுள்ளது.
இந்த விமான நிறுவனம் ஆனது டாடா குழுமம் (74.9%) மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (25.1%) ஆகியவற்றுக்குச் சொந்தமான ஏர் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது.
இண்டிகோவிற்கு அடுத்தபடியாக பயணிகளை ஏற்றிச் செல்வதன் அடிப்படையில் இது இந்தியாவின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமாக உள்ளது.
இது 1932 ஆம் ஆண்டில் J.R.D. டாடா அவர்களால் டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் நிறுவப் பட்டது.