புதுக்கோட்டையில் உள்ள கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு ‘அகல் விளக்கு’ எனும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டமானது, இணையவெளிப் பாதுகாப்பில் வலுவான கவனம் செலுத்துவதுடன், மன, உடல் மற்றும் சமூக ரீதியான சவால்களிலிருந்து சிறுமிகளான மாணவிகளை (9 - 12 ஆம் வகுப்புகள்) பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாநில அரசானது அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் இந்தத் திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.
இந்த முன்னெடுப்பின் கீழ், ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர் அடங்கிய குழுக்கள், மாணவிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளைப் பரிந்துரைக்கும்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக உளவியல் ஆலோசனையும் வழங்கப்படும்.