மத்திய ஆயுதக் காவற்படைகள் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவு ஆகியவற்றிற்கான ஆட்சேர்ப்புகளில் அக்னி வீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப் படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
17.5 முதல் 21 வயதுக்குட்பட்ட மத்திய ஆயுதக் காவற்படைகள் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவுகளில் உள்ள அக்னி வீரர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரையில் வயது வரம்பில் தளர்வு வழங்கவும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ஆட்சேர்ப்பின் ஆரம்ப வகுப்பினருக்கு விதிக்கப் பட்டுள்ள அதிகபட்ச வயது வரம்பில் ஐந்து ஆண்டுகள் நீட்டிப்பு அவர்களுக்கு வழங்கப்படும்.
மத்திய அரசானது, இத்திட்டத்திற்கான அதிகபட்ச வயது வரம்பை ஒருமுறையிலான வாய்ப்பாக 21 என்ற வயதிலிருந்து 23 ஆக உயர்த்தியது.