அக்னிபாத் என்பது இந்திய ஆயுதப் படைகளுக்கான புதிய ஆட்சேர்ப்புத் திட்டமாகும்.
இத்திட்டத்தின் கீழ், இளைஞர்கள் ஆயுதப்படைகளில் "அக்னிவீரர்கள்" என்ற பிரிவில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.
17.5 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் 4 ஆண்டுகளுக்கு அக்னிவீரர்கள் என்ற பிரிவில் ஆயுதப் படையில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள்.
நான்கு ஆண்டுப் பதவிக் காலத்தினை நிறைவு செய்த பிறகு, சுமார் 25 சதவீத அக்னி வீரர்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு வழக்கமானப் பணியாளர்களாக ஆயுதப் படைகளில் பதிவு செய்யப் படுவார்கள்.
அக்னிவீரர்கள் படைப் பிரிவிலிருந்து வெளியேறும் போது ₹ 11.71 லட்சம் சேவா நிதி தொகுப்பாக வழங்கப்படும்.
இதற்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
எனினும், இதில் ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கப் பெறாது.