அசாம் மற்றும் மேகாலய மாநில அரசாங்கங்கள் ஆனது கூட்டாக இணைந்து ஒரு நீர்மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனக் கட்டமைப்பினை நிறுவ முடிவு செய்துள்ளன.
உள்ளூர் மக்களுடன் கலந்தாலோசித்த பிறகு இரு அரசாங்கங்களும் 55 மெகாவாட் திறன் கொண்ட குல்சி நீர்மின்சாரம் மற்றும் நீர்ப்பாசன நிலையக் கட்டமைப்பினை மேற்கொள்ளும்.
கௌஹாத்தியின் மேற்கே பிரம்மபுத்திராவின் துணை நதியான குல்சி நதியானது, மேகாலயாவின் மேற்கு காசி மலை மாவட்டத்திலிருந்து கீழ் நோக்கிப் பாய்கிறது.
இந்த நதியானது கங்கை வாழ் ஓங்கில்களின் (டால்பின்) ஒரு முக்கிய இனப்பெருக்க இடமாகும்.