TNPSC Thervupettagam

அச்சிடப்பட்ட முதல் சமஸ்கிருத இலக்கணம்

June 26 , 2025 7 days 53 0
  • குரோஷிய நாட்டின் பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச்சிடமிருந்து இந்தியப் பிரதமர் வெஸ்டினின் சமஸ்கிருத இலக்கணத்தின் மறுபதிப்பைப் பெற்றார்.
  • 1790 ஆம் ஆண்டு குரோஷியாவின் அறிவியல் ஆய்வாளரும் சமயப் பரப்பாளருமான பிலிப் வெஸ்டின் (1748-1806) என்பவரால் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஒரு சமஸ்கிருத இலக்கணம் ஆனது இலத்தீன் மொழியில் எழுதப்பட்டது.
  • 1774 ஆம் ஆண்டில் மலபார் பகுதிக்கு ஒரு சமயப் பரப்பாளராக வருகை தந்த பிலிப் வெஸ்டின், பின்னர் மலபார் கடற்கரையில் கிறிஸ்துவ மதத்தின் ஒரு பிரதான குருவாக ஆனார்.
  • 1790 ஆம் ஆண்டில், அச்சிடப்பட்ட முதல் சமஸ்கிருத இலக்கணத்தை வெளியிட்ட ஒரு பெருமை அவரையே சாரும்.
  • அவரை நினைவு கூரும் வகையில் ஒரு நினைவுப் பதாகையானது 1999 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் திறக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்