TNPSC Thervupettagam

அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 5 கோடி பதிவுகள்

February 7 , 2023 900 days 438 0
  • அடல் ஓய்வூதியத் திட்டத்தின் (APY) கீழான பதிவானது சமீபத்தில் 5 கோடி என்ற எண்ணிக்கையினைக் கடந்துள்ளது.
  • அடல் ஓய்வூதியத் திட்டம் என்பது 2015 ஆம் ஆண்டு மே 09 அன்று இந்திய அரசினால் தொடங்கப்பட்ட முதன்மையான சமூகப் பாதுகாப்புத் திட்டம் ஆகும்.
  • இந்திய அரசானது, அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், வங்கிகளுக்கு ஆண்டுதோறும் பல்வேறு இலக்குகளை நிர்ணயிக்கிறது.
  • 2022 ஆம் ஆண்டில் 29 வங்கிகள் அவற்றின் இலக்கை எட்டியுள்ளன.
  • பல்வேறு அமைப்பு சாராத் துறைகளில் பணிபுரியும் மக்களுக்கு முதியோர் வருமானப் பாதுகாப்பை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதி முதல் வருமான வரி செலுத்தும் எந்தவொரு நபரும் புதிய அடல் ஓய்வூதியத் திட்டம் கணக்கைத் தொடங்க அனுமதிக்கப் படுவது இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்