அடிமைத் தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச நாள் - டிசம்பர் 02
December 5 , 2020 1900 days 559 0
இந்த நாள் மக்களைக் கடத்துதல், பாலியல் ரீதியான சுரண்டல், குழந்தைத் தொழிலாளர்கள், கட்டாயத் திருமணம், மற்றும் ஆயுதப் போட்டியில் குழந்தைகளை ஈடுபடுத்துதல் போன்ற அடிமைத்தனத்தின் தற்போதைய வடிவங்களை அகற்றுவதில் கவனம் செலுத்துகிறது.
ஐ.நா.வின் கூற்றுப் படி, 40.3 மில்லியன் மக்கள் நவீன அடிமைத்தனத்தில் உள்ளனர், இதில் 24.9 மில்லியன் கட்டாயப் படுத்தப்பட்ட வேலை மற்றும் 15.4 மில்லியன் கட்டாயத் திருமணம் ஆகியன அடங்கும்.
மக்கள் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாகச் சுரண்டப் படுவதை எதிர்க்கும் ஒரு ஒப்பந்தமானது 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் நிறைவேற்றப் பட்டது.