அடுத்த 25 ஆண்டுகளில் இந்திய நாட்டினை ஒரு வளர்ச்சிப் பெற்ற நாடாக மாற்றச் செய்வதற்கான “பஞ்ச் பிரான் இலக்குகளை” (ஐந்து தீர்மானங்கள்) பிரதமர் அவர்கள் நிர்ணயித்தார்.
அந்த ஐந்து இலக்குகள் பின்வருமாறு
மாபெரும் தீர்மானங்கள் மற்றும் வளர்ச்சிப் பெற்ற இந்தியா என்ற உறுதியுடன் முன்னேறுதல்
அடிமைத் தனத்தின் அனைத்துத் தடயங்களையும் அழித்தல்
இந்தியாவின் பாரம்பரியத்தைப் பற்றி பெருமிதம் கொள்ளுதல்
ஒற்றுமையே வலிமை
பிரதமர் மற்றும் முதல்வர்கள் உள்ளிட்ட குடிமக்களின் கடமைகள்.
2047 ஆம் ஆண்டில் நமது நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது இந்த ஐந்து தீர்மானங்கள் வளர்ச்சிப் பெற்ற நாட்டிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.