அடையாளத் தொடர்பறும் கோளாறு குறித்த விழிப்புணர்வு தினம் - மார்ச் 05
March 12 , 2024 875 days 481 0
அடையாளத் தொடர்பறும் கோளாறு உள்ளவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நாம் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது பல்வகை அடையாள கோளாறு என்றும் அழைக்கப்படுகிறது.
இது ஒரு நபர் தனது மனதில் பல நபர்கள் வாழ்வது போல் என்று நம்பும் மன நிலை ஆகும்.
அவர்கள் பெரும்பாலும் பல அடையாளங்களால் பெருமளவில் கட்டுப்படுத்தப் படுவதோடு, அவர்களின் இயல்பான வாழ்க்கையைத் திரும்பப் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வர்.