அணு ஆயுதங்களைத் தடை செய்வதற்கான ஐ.நா.வின் ஒப்பந்தம்
October 31 , 2020 1744 days 700 0
அணு ஆயுதங்களைத் தடை செய்வதற்கான ஐ.நா.வின் ஒப்பந்ததிற்குச் சுமார் 50 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
ஹோண்டுராஸிடமிருந்து 50வது ஒப்புதல் பெறப் பட்டதாக ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது அந்த ஒப்பந்தத்தை தற்போது நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.
அணு ஆயுதங்களைத் தடை செய்வதற்கான ஒப்பந்தமானது அணு ஆயுதக் குறைப்புக்கான முதலாவது பலதரப்பு மற்றும் கட்டுப்படுத்தும் ஒப்பந்தமாகும்.
இது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதல், மேம்படுத்துதல், உற்பத்தி செய்தல், சோதனை செய்தல், நிலைப்படுத்தி வைத்தல், இருப்பு வைத்தல் மற்றும் அதைக் கொண்டு அச்சுறுத்தல் செய்தல் ஆகியவற்றைத் தடை செய்கிறது.
இது 193 உறுப்பினர்கள் அடங்கிய ஐ.நா பொதுச் சபையால் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 122 நாடுகளின் ஒப்புதலுடன் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா போன்ற அணுசக்தி கொண்ட முக்கிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தன.
பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேலுடன் சேர்ந்து இந்தியாவும் இந்த ஒப்பந்தத்திற்கு வாக்களிப்பதைத் தவிர்த்தன.