இந்தியாவை மாற்றுவதற்கான நிலையான அணுசக்திப் பயன்பாடு மற்றும் முன்னேற்றம் (சாந்தி) சட்டம், 2025 நிறைவேற்றப்பட்ட பிறகு அதானி குழுமம் அணு சக்தித் துறையில் நுழைந்தது.
அதானி பவர் லிமிடெட், அதானி அணுசக்தி லிமிடெட் என்ற பெயரில் முழுமையாகச் சொந்தமான துணை நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
சாந்தி சட்டம் தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் அணு மின் நிலையங்களை இயக்கவும் வெளிநாட்டுத் தொழில்நுட்பக் கூட்டாளர்களுடன் சேர்ந்து ஒத்துழைக்கவும் அனுமதிக்கிறது.
அணுசக்திச் சட்டத்திற்குப் பதிலாக வந்த இந்தச் சட்டம் அணுசக்தி உற்பத்தியில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கிறது.
இந்தியாவில் தற்போது சுமார் 8.8 ஜிகாவாட் (GW) நிறுவப்பட்ட அணுசக்தி திறன் உள்ளது என்பதோடுஇது மொத்த மின்சார உற்பத்தியில் சுமார் 3% பங்களிக்கிறது.
ஆற்றல் மாற்ற இலக்கின் ஒரு பகுதியாக, அடுத்தப் பத்தாண்டுகளில் அணுசக்தித் திறனை 32 ஜிகாவாட்டாக உயர்த்துவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.