அரசால் தனியார் மயமாக்கத்திற்காக முன்மொழியப்பட்ட ஆறு விமான நிலையங்களில் ஐந்தினை அதானி குழுமம் ஏலத்தில் வென்றிருக்கின்றது.
அதானி குழுமம் அகமதாபாத், திருவனந்தபுரம், லக்னௌ, மங்களூரு மற்றும் ஜெய்ப்பூர் விமான நிலையங்களை ஏலத்தில் வென்றிருக்கின்றது. கவுஹாத்தி விமான நிலையம் பின்னர் செயல்படுத்தப்படும்.
தனியார்-அரசு பங்களிப்பு மாதிரியில் விமான நிலையங்களை மேலாண்மை செய்வதற்கான இந்நடவடிக்கையானது உலகத் தரத்தில் உட்கட்டமைப்பையும் சேவைகளையும் அளிப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும்.