அதிக எண்ணிக்கையிலான ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சு பொரிப்பு பதிவுகள் 2024
June 16 , 2024 333 days 332 0
தமிழகத்தில் ஜனவரி முதல் மே மாதம் வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி கடல் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
இதுவரை தமிழகத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ஆமைக் குஞ்சுகள் கடலில் விடபட்ட நிகழ்வு இதுவே ஆகும்.
கடலூர் (89,648), நாகப்பட்டினம் (60,438) மற்றும் சென்னை (38,230) ஆகிய கடற்கரைப் பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ஆலிவ் ரிட்லி குஞ்சுகள் கடலில் விடப் பட்டன.
மாநிலம் முழுவதும், இந்தப் பருவத்தில் 28,971 ஆமைகள் இறந்துள்ளன.