TNPSC Thervupettagam

அதிக எண்ணிக்கையிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் – தேசியத் தலைநகர்ப் பகுதியான தில்லி

September 12 , 2019 2115 days 601 0
  • பெங்களூரைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ஜின்னோவ் மற்றும் டை தில்லி ஆகியவை "டர்போசார்ஜிங் டெல்லி - தேசியத் தலைநகர்ப் பகுதியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் (புதிய தொழில் தொடங்குதல்) சூழல் அமைப்பு" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
  • பெங்களூரு மற்றும் மும்பையை விட தேசியத் தலைநகர்ப் பகுதியான தில்லியானது அதிகமான ஸ்டார்ட் அப் மற்றும் யூனிகார்ன் நிறுவனங்களைக் கொண்டுள்ளது என்று அந்த அறிக்கை கூறுகின்றது.
  • யூனிகார்ன் என்பது குறைந்தபட்சம் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனங்கள் ஆகும்.
  • பொருத்தமான அரசு மற்றும் தனியார் துறை இடையீடுகளுடன் தேசியத் தலைநகர்ப் பகுதியான தில்லியானது 2025 ஆம் ஆண்டில் முதல் 5 உலகளாவிய ஸ்டார்ட் அப் மையங்களில் ஒன்றாக உருவெடுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்