பெங்களூருவில் உள்ள JNCASR நிறுவனத்தினைச் சேர்ந்த இந்திய அறிவியலாளர்கள் அதிவேகத்தில் மின்னேற்றம் செய்யப்படும் சோடியம்-அயனி மின் கலத்தினை (SIB) உருவாக்கியுள்ளனர்.
இது வெறும் 6 நிமிடங்களில் 80% மின்னேற்றத்தினை அடையும் மற்றும் இது 3,000 பயன்பாட்டுச் சுழற்சிகளுக்கு மேல் நீடிக்கும்.
வழக்கமான ஒரு SIB கலமானது, மிக மந்தமான மின்னேற்றம் மற்றும் குறுகிய ஆயுட் காலத்தினால் பாதிக்கப்படுகின்றன.
இந்தப் புதிய மின் கலமானது, வேதியியல் மற்றும் நுண் தொழில்நுட்பத்தின் பெரும் புத்திசாலித்தனமான கலவையைப் பயன்படுத்துகிறது.
லித்தியம் அயனி மின் கலமானது இதுவரையில் இந்தச் செயல்பாட்டினைக் கொண்டு இருந்தாலும், அவை விலை உயர்ந்தவையாக உள்ளன.
மேலும், லித்தியம் வளங்கள் மிகவும் குறைவாகவும், புவிசார் அரசியல் ரீதியாகவும் வரையறுக்கப் பட்டுள்ளன.
சோடியம் ஆனது, பற்றாக்குறையாகவும் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகின்ற லித்தியம் போலல்லாமல், மலிவானது மற்றும் இந்தியாவில் ஏராளமாகக் கிடைக்கிறது.
லித்தியத்திற்குப் பதிலாக சோடியத்தில் கட்டமைக்கப்பட்ட மின் கலமானது, இந்தியா ஆற்றல் சேமிப்புத் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற உதவும்.