TNPSC Thervupettagam

அதுல் மிஸ்ரா Vs இந்திய அரசு வழக்கு 2026

March 1 , 2026 17 days 105 0
  • சகோதரத்துவத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் சமநிலைப்படுத்துவது குறித்து அதுல் மிஸ்ரா Vs  இந்திய அரசு (2026) வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது.
  • ஒரு சமூகத்தைத் தவறாக சித்தரிப்பதாகக் கூறப்படும் ஒரு முன்மொழியப்பட்ட திரைப் படத்தின் பெயரை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
  • சாதி, மதம், மொழி அல்லது பிராந்தியத்தின் அடிப்படையில் எந்தவொரு சமூகத்தையும் இழிவுபடுத்துவது அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்கப்படாது என்று நீதிமன்றம் கூறியது.
  • சகோதரத்துவம் என்பது முகவுரையின் ஒரு பகுதி என்றும், நாட்டின் கண்ணியம், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க அது முக்கியமானது என்றும் அது கூறியது.
  • சரத்து 19(1)(a) இன் கீழ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை நீதிமன்றம் உறுதி செய்தது ஆனால் சரத்து 19(2) இன் கீழ் அது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்றும் கூறியது.
  • கட்டுப்பாடுகள் பொதுமக்களின் உணர்வை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அல்லாமல், தேவையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்