அந்தமான் மற்றும் நிக்கோபாரின் 3 தீவுகள் பெயர் மாற்றம்
December 31 , 2018 2338 days 889 0
நேதாஜி சுபாஷ் சந்திர போஸிற்கு கௌரவமளிக்கும் வகையில் இந்தியப் பிரதமர் மூன்று அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்குப் பெயர் மாற்றம் செய்திருக்கின்றார்.
பெயர் மாற்றப்பட்ட தீவுகளாவன
ராஸ் தீவு (பழைய பெயர்) - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு
நீல் தீவு (பழைய பெயர்) - சாஹீத் தீவு
ஹேவ்லாக் தீவு (பழைய பெயர்) - ஸ்வராஜ் தீவு
1943 ஆம் ஆண்டு ஆசாத் இந்த் அரசை ஏற்படுத்தியதாக அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் தீர்மானத்தின் மீதான 75வது ஆண்டு தினத்தை அனுசரிக்கும் வகையில் 150 மீட்டர் உயரமுடைய கொடிக் கம்பத்தில் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றினார்.
மேலும் பிரதமர் இந்த சிறப்பு நாளின் நினைவாக சிறப்பு அஞ்சல் தபால் தலையையும், 75 ரூபாய் நாணயத்தையும் வெளியிட்டார்.
பின்னணி
சுபாஷ் சந்திர போஸ், இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் ஜப்பான் இந்தப் பகுதிகளைக் கைப்பற்றிய பிறகு 1943 ஆம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி இங்கு தேசியக் கொடியை ஏற்றினார்.
மேலும் அவர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் சாஹித் மற்றும் சுவராஜ் தீவுகள் என பெயர் மாற்றப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார்.