2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1.5 பில்லியன் டாலர்கள் உயர்ந்து 677.84 பில்லியன் டாலர்களாக உள்ளது.
இந்தியாவின் கையிருப்பில் முக்கிய அங்கமான அந்நியச் செலாவணிச் சொத்துக்கள் 0.8 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 574.98 பில்லியன் டாலர்களாக உள்ளது.
இதற்கிடையில், தங்கத்தின் கையிருப்பு மதிப்பு ஆனது சுமார் 638 மில்லியன் டாலர்கள் அதிகரித்து 79.9 பில்லியன் டாலர்களாக உள்ளது.
மேலும், சிறப்பு எடுப்பு உரிமைகள் (SDR) என்பது 6 மில்லியன் டாலர்கள் குறைந்து 18.35 பில்லியன் டாலர்களாக உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) இந்தியாவின் கையிருப்பு நிலையானது, சுமார் 43 மில்லியன் டாலர்கள் அதிகரித்து 4.5 பில்லியன் டாலர்களாக உள்ளது.
2019 ஆம் ஆண்டில் சுமார் 6.7% ஆக இருந்த அந்நியச் செலாவணி இருப்புக்களில் இந்தியாவின் தங்கத்தின் பங்கு ஆனது 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 12% ஆக இரட்டிப்பாகி உள்ளது.