TNPSC Thervupettagam

அனைத்திற்குமான அவசர கால உதவி எண்

February 22 , 2019 2298 days 902 0
  • மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மத்திய பெண்கள் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மேனகா காந்தியும் இணைந்து 15 மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசத்திலும் மும்பை நகரத்திலும் பெண்கள் பாதுகாப்பு முன்னெடுப்பிற்கான அவசர கால பதிலளிப்பு ஆதரவு முறையை ஆரம்பித்து வைத்தனர்.
  • 112 என்ற எண்ணானது காவல் (100), தீயணைப்பு (101), சுகாதாரம் (108), பெண்கள் பாதுகாப்பு (1090) மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு (1098) போன்றவற்றிற்கான உடனடி உதவிகளுக்கான சேவைகளை வழங்கிடும்.
  • அமெரிக்காவில் உள்ள 911 என்ற எண்ணைப் போன்று இந்த ஒற்றை எண்ணானது அவசர கால சேவைகளுக்கான எண்ணாகும்.
  • 16 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் பின்வருமாறு: ஆந்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, குஜராத், புதுச்சேரி, லட்சத் தீவுகள், அந்தமான், தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, ஜம்மு மற்றும் காஷ்மீர்.
  • இந்த அவசர கால சேவைகளை அவசர கால பதிலளிப்பு ஆதரவு மையத்தின் (Emergency Response Support System - ERSS) இணைய தளத்தில் உள்ளீடு செய்வதன் மூலம் நேரடியாகவும் அணுகிட முடியும்.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்ட 112 இந்தியா என்ற செயலியும் கூகுள் பிளே ஸ்டோரிலும் ஆப்பிள் ஸ்டோரிலும் வெளியிடப்பட்டது.
  • மத்திய உள்துறை அமைச்சர், நிர்பயா நிதியின் கீழ் தமிழ்நாடு (சென்னை மற்றும் மதுரை), உத்தரப் பிரதேசம் (லக்னோ மற்றும் ஆக்ரா), மேற்கு வங்காளம் (கொல்கத்தா) மற்றும் மகாராஷ்டிரா (மும்பை) ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள மாநில தடயவியல் ஆய்வு நிலையங்களில் ஒரு சிறப்புத் திட்டமாக 78.76 கோடி ரூபாய் மதிப்பில் டி.என்.ஏ. ஆய்வு நிலையங்களின் திறன்களை மேம்படுத்தும் திட்டத்தையும் அறிவித்தார்.
பாலியல் துன்புறுத்தல்களுக்கான விசாரணையைப் பின்தொடரும் அமைப்பு
  • பாலியல் துன்புறுத்தல்களுக்கான விசாரணையைப் பின்தொடரும் அமைப்பையும் நகரப் பாதுகாப்பு கண்காணிப்பு அமலாக்க இணைய வாயிலையும் அரசு தொடங்கி வைத்தது.
  • இது கற்பழிப்பு வழக்குகளில் இரண்டு மாதங்களில் விசாரணையை நிறைவுபடுத்திட நிகழ்நேரக் கண்காணிப்பு மற்றும் மேலாண்மையை மேற்கொண்டிட சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு ஒரு நிகழ்நேர அமைப்பைக் கிடைக்கச் செய்வதற்கான அமைப்பாகும்.
  • இது ஏற்கனவே நாட்டின் 15000 காவல் நிலையங்களில் உள்ள தகவல்களை அணுகிடும் குற்றம் மற்றும் குற்றச் செயல் கண்காணிப்பு வலையமைப்பு (Crime and Criminal Tracking Network and Systems - CCTNS) நடைமுறைகளின் பணிப் பளுவைக் குறைத்திடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்