ஏர் இந்தியாவானது சமீபத்தில் அனைத்துப் பெண்கள் விமான ஓட்டுனர் குழுவால் இயக்கப் படும் ஒரு மிக நீண்ட இடை விடாத விமானத்தை இயக்கியது.
விமானப் பாதையாக துருவப் பாதையில் பறப்பதன் மூலம் எரிபொருள் நுகர்வு, பறக்கும் நேரம் மற்றும் கார்பன் தடம் ஆகியவற்றை இந்தப் புதிய பாதையானது கட்டுப்படுத்துகிறது.
இந்த விமானம் ஏர் இந்தியாவின் போக்குவரத்துப் பாதைகளில் நீண்ட தூரமாக சுமார் 14,000 கிமீ (8,698 மைல்) பயணம் செல்லக் கூடியது ஆகும், மேலும் இது இந்தியாவிலிருந்து சென்று மீண்டும் நாடு திரும்பும் வகையில் மிக நீண்ட நேரம் பயணம் செல்லும் ஒரு விமானமாகும் (தோராயமாக 16 மணிநேரம்).
இதில் கேப்டன் சோயா அகர்வால், கேப்டன் பாபகரி தன்மாய், கேப்டன் அகன்ஷா சோனாவாரி மற்றும் கேப்டன் சிவானி மன்ஹாஸ் ஆகிய நான்கு பெண்கள் அடங்குவர்.
இவர்கள் 17 மணி நேர அளவிற்கு விமானப் பயணம் மேற்கொண்டனர்.
இந்த விமானப் பயணம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸில் தொடங்கப்பட்டது.
இது பெங்களூருவில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது.
பறக்கும் தூரத்தைப் பொறுத்த வரை, இந்தப் பாதை உலகின் முதல் 10 மிக நீண்ட விமானப் பாதைகளில் ஒன்றாகும்.
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான அளவில் பெண் விமானிகளை ஏர் இந்தியா கொண்டுள்ளது.