கேரள மாநிலமானது, ஐந்து பொதுவான வகை சுதந்திரமாக/கட்டுப்பாடின்றி வாழும் அமீபாவை (FLA) அடையாளம் காண வேண்டி அதன் சொந்த மூலக்கூறு கண்டறியும் சோதனைக் கருவிகளை உருவாக்கியது.
மனிதர்களுக்கு நச்சுத்தன்மை வாய்ந்த அவை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் நோயை ஏற்படுத்தும்.
மிகவும் ஆபத்தான ஒரு மூளைத் தொற்றான, அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் பாதிப்புகள் தற்போது கேரளாவில் அடிக்கடி பதிவாகின்றன.
சுற்றுச்சூழலில் 400க்கும் மேற்பட்ட சுதந்திரமாக வாழும் அமீபாக்கள் உள்ளன ஆனால் அவற்றுள் ஆறு மட்டுமே மனிதர்களுக்கு தொற்றினை ஏற்படுத்தும் நோய்க்கிருமியாக இருப்பதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
அவற்றில் ஐந்து நச்சு உயிரினங்களை அடையாளம் காணும் ஒரு திறன் கொண்ட ஒரே ஆய்வகம் கேரள மாநிலப் பொதுச் சுகாதார ஆய்வகமாகும்.