2025-ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு பருத்திப் பொருட்களை வழங்கும் மிகப்பெரிய நாடாக சீனாவை முந்தி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியா சுமார் 0.6 மில்லியன் டன் பருத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்த அதே நேரத்தில் அதிக வரி (10%-125%) மற்றும் ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகள் காரணமாக சீனாவின் ஏற்றுமதி சுமார் 0.5 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது.
சீனாவின் உய்குர் கட்டாய உழைப்பு தடுப்புச் சட்டம் (UFLPA) போன்ற அமெரிக்கச் சட்டங்களானது, சீன இறக்குமதியைக் குறைத்து இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து வாங்குவதை அதிகரித்தன.
ஆடைகள் மற்றும் வீட்டு ஜவுளிகள் போன்ற பருத்தி சார்ந்த பொருட்களின் உலகின் மிகப்பெரிய இறக்குமதியாளராக அமெரிக்கா தொடர்ந்து நீடிக்கிறது.