அமெரிக்கா மற்றும் ரஷ்யா - உக்ரைன் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை
January 14 , 2022 1261 days 510 0
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகளின் முக்கியச் சந்திப்பு நடைபெற்றது.
உக்ரைனில் நிலவும் பதற்ற நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் விவாதிக்க உள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால் அமெரிக்காவும் மற்ற மேற்கத்திய நாடுகளும் அச்சத்தில் உள்ளன.
உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் இதர பிற மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளிக்கின்றன.
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு உக்ரைன் நாடு உருவாக்கப்பட்டது.
உக்ரைன் எல்லையில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது.
இதனால் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பனிப்போர் (உட்பூசல்) மூண்டது.
பின்னணி
2014 ஆம் ஆண்டில் ரஷ்யா கிரீமியாவினைத் தன்னோடு இணைத்ததைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை தொடங்கியது.
கிரீமியா உக்ரைன் நாட்டில் அமைந்துள்ளது.
இப்பகுதி கெர்ச் ஜலசந்தியை உள்ளடக்கியது.
ரஷ்யாவின் அனைத்துத் தொடர்புகளும் மத்திய தரைக்கடல் நாடுகளைச் சென்று அடைவதற்கான ஒரே பாதை இந்த ஜலசந்தி மட்டுமே ஆகும்.
இந்த ஜலசந்தியானது அசோவ் கடலையும் கருங்கடலையும் இணைக்கிறது.
இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வர்த்தகப் பாதையாகும்.
முக்கியமாக ரஷ்ய நாட்டின் கப்பல் போக்குவரத்தை கடினமாக்குவதற்காக வேண்டி அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆகியவை உக்ரைன் நாட்டிற்கு ஆதரவை வழங்குகின்றன.