"நிழல் சரக்குப் பரிமாற்ற வலைப்பின்னல்" அறிக்கையில் அமெரிக்கா இந்தியாவைக் குறிப்பிட்டுள்ளது.
சரக்குப் பரிமாற்றம் என்பது இறுதி இலக்கை அடைவதற்கு முன்பு ஒரு இடைநிலை நாடு வழியாக பொருட்கள் அனுப்பப்படுவதைக் குறிக்கிறது.
சுங்க வரிகளை (இறக்குமதி மீதான வரிகள்) தவிர்ப்பதற்காக சில சீனப் பொருட்கள் மூன்றாம் நாடுகள் வழியாக அமெரிக்க சந்தைக்குள் நுழைந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் சரக்குப் பரிமாற்ற அபாயக் கட்டமைப்பில் இந்தியா 'அடுக்கு 1 – பன்முகப்படுத்தப்பட்ட அளவிலான முன்னணியினர்' பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.
சீனாவுடன் தொடர்புடைய சில தயாரிப்புகளுக்கான சாத்தியமான பாதையாக புனே-குஜராத்-சென்னை தொழில் வழித்தடத்தை இந்த அறிக்கை அடையாளம் கண்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய வர்த்தகச் சரக்குப் போக்குவரத்தைக் கண்டறிந்து கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளைப் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.