TNPSC Thervupettagam

அமெரிக்காவும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தமும்

February 4 , 2026 14 hrs 0 min 13 0
  • அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.
  • வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து இரண்டு முறை விலகிய ஒரே நாடு இது தான்.
  • 2017-ல் முதன்முதலில் விலகிய பிறகு, 2021-ல் அதிபர் பைடனின் கீழ் மீண்டும் இணைந்திருந்த அமெரிக்கா, இப்போது மீண்டும் இந்த உலகளாவிய ஒப்பந்தத்தைக் கைவிட்ட ஒரே நாடாக மாறியுள்ளது.
  • சீனாவிற்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் நாடு அமெரிக்கா ஆகும்.
  • பாரிஸ் ஒப்பந்தத்திற்கு வெளியே உள்ள மற்ற ஐ.நா உறுப்பு நாடுகள் ஈரான், லிபியா மற்றும் ஏமன் மட்டுமே.
  • பாரிஸ் ஒப்பந்தம் என்பது, புவி வெப்பமயமாதலைத் தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 2°C-க்குக் கீழே —குறிப்பாக 1.5°C-க்குக் கீழே— கட்டுப்படுத்தும் நோக்குடன், 2015-ல் (COP21) 195 தரப்பினரால் ஏற்றுக் கொள்ளப் பட்ட சட்டப்பூர்வ பிணைப்புடைய ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
  • இது, நாடுகள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்டப் பங்களிப்புகள் (NDCs) எனப்படும் பெருகிய முறையில் லட்சியம் நிறைந்த, தன்னார்வப் பருவநிலைத் திட்டங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோருகிறது.
  • 1.5°C இலக்கு என்பது ஒரு தனி ஆண்டைக் குறிக்காமல், பொதுவாக 20 ஆண்டுகளின் சராசரியைக் குறிப்பதாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்