அமைப்புசாராத் தொழிலாளர்களின் தேசிய தரவுதளம் என்பது தொழிலாளர்களின் தரவுதளத்தை அவர்களின் 12 இலக்க ஆதார் எண்ணைப் பயன்படுத்திப் பராமரிக்கும்.
இது அமைப்புசாராத் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கான முதல் தேசிய தரவுதளமாக அமையும்.
இதைத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பராமரிக்கும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முறையான தளத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
அரசாங்கமானது அமைப்புசாராத் துறைக்கான நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதையும் இது எளிதாக்கும்.
கோவிட்-19 போன்ற சூழ்நிலைகளில் தொழிலாளர்களின் இடப்பெயர்தலைக் கண்காணிக்கவும் இது உதவும்.
அமைப்புசாராத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2008 என்ற சட்டமானது முதலில் ஒவ்வொரு தொழிலாளியையும் பதிவு செய்து அவர்களுக்குத் திறன் அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.