TNPSC Thervupettagam

அம்பேத்கர் சமூகப் புத்தாக்கம் மற்றும் தொடக்க நிறுவனங்களைக் காக்கும் திட்டம்

October 5 , 2020 1780 days 664 0
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது அம்பேத்கர் சமூகப் புத்தாக்கம் மற்றும் தொடக்க நிறுவனங்களைக் காக்கும் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது பட்டியல் சாதியினருக்கான துணிகர மூலதன நிதியை அமல்படுத்தும் (Venture Capital Fund for Scheduled Castes).
  • குறிக்கோள்கள்:
    • பட்டியல் இனத்தைச் சேர்ந்த தொழில்முனையும் இளைஞர்களை அதிலும் மாற்றுத் திறனாளிகளை அதிக முன்னுரிமையுடன் ஊக்குவித்தல்.
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப வணிக தொடக்க நிறுவனங்களுடன் (தொடக்க நிறுவனங்களைக் காப்பது) இணைந்து ஓர் ஒருங்கிணைந்த பணி மூலம் 2024 ஆம் ஆண்டு வரை (1,000) புதுமையான யோசனைகளை ஆதரித்தல்.
  • இதன் கீழ், 1,000 பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அடுத்த 4 ஆண்டுகளில் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப வணிக தொடக்க நிறுவனங்கள் (Technology Business Incubators) மூலம் புத்தாக்க யோசனைகளுடன் அடையாளம் காணப் படுவார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்