TNPSC Thervupettagam

அம்ரித் பாரத் இரயில் நிலையத் திட்டம்

December 31 , 2022 898 days 438 0
  • மத்திய இரயில்வே அமைச்சகம் ஆனது இந்தியா முழுவதும் உள்ள இரயில் நிலையங்களை நவீனப்படுத்துவதற்காக அம்ரித் பாரத் இரயில் நிலையத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகளுக்கு அப்பாற்பட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் இரயில் நிலைய வளாகத்தின் கூரையின் மேற்பகுதியில் அமைந்த விற்பனைக் கூடம் மற்றும் நகர வணிக மையங்களை நீண்ட காலத்திற்கு இயங்கும் வகையில் உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.
  • இத்திட்டம் தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்துதல் & மாற்றுதல் மற்றும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றைப் பூர்த்தி செய்யும்.
  • இதில், நடைமேடைகள், இணைய சேவை இணைப்பு, பல்வடிவமைப்பு சார்ந்த அறை கலன்கள், உள்ளடக்கம், நிலைத்தன்மை மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்தச் செய்தல் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்