மத்திய இரயில்வே அமைச்சகம் ஆனது இந்தியா முழுவதும் உள்ள இரயில் நிலையங்களை நவீனப்படுத்துவதற்காக அம்ரித் பாரத் இரயில் நிலையத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகளுக்கு அப்பாற்பட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் இரயில் நிலைய வளாகத்தின் கூரையின் மேற்பகுதியில் அமைந்த விற்பனைக் கூடம் மற்றும் நகர வணிக மையங்களை நீண்ட காலத்திற்கு இயங்கும் வகையில் உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.
இத்திட்டம் தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்துதல் & மாற்றுதல் மற்றும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றைப் பூர்த்தி செய்யும்.
இதில், நடைமேடைகள், இணைய சேவை இணைப்பு, பல்வடிவமைப்பு சார்ந்த அறை கலன்கள், உள்ளடக்கம், நிலைத்தன்மை மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்தச் செய்தல் ஆகியவை அடங்கும்.