இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியான FM கலிபுல்லா தலைமையிலான 3 உறுப்பினர்களைக் கொண்ட பாப்ரி மஸ்ஜித் - ராம் ஜென்ம பூமி நிலப் பிரச்சினை தொடர்பான சமரசக் குழுவானது தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இக்குழுவில் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் மற்றும் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் உள்ளனர்.
சமரசம் மூலம் ஒரு இணக்கமான தீர்வுக்கு வருவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தன.
எனவே, இந்த வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் தினசரி அடிப்படையில் விசாரிக்க முடிவு செய்துள்ளது.
இந்த விசாரணையை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரிக்கும்.