TNPSC Thervupettagam

அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2019

December 26 , 2019 2019 days 590 0
  • இது 2019 ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் துறை இணை அமைச்சரான ரேணுகா சிங் சருதா என்பவரால் மாநிலங்களவையில் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை, 1950 ஆனது பழங்குடியினர் மற்றும் பழங்குடிச் சமூகங்களைப் பட்டியலிடப்பட்ட பழங்குடியினராகக் கருதப்படும் என்று குறிப்பிடுகின்றது.
  • இந்த மசோதாவானது கர்நாடகாவில் உள்ள பட்டியலிடப்பட்ட பழங்குடியினரைக் குறிப்பிடும் ஆணையின் ஆறாம் பிரிவைத் திருத்துகின்றது.
  • இது பின்வருவனவற்றை மாற்றுவதன் மூலம் இந்த ஆணையைத் திருத்துகின்றது:
    • “நாயக்தா, நாயக்கா” ஆகியவற்றிற்குப் பதிலாக “நாயக்தா, நாயக்கா” (பரிவரா மற்றும் தலவரா உட்பட) என்பதனைச் சேர்த்தல் மற்றும்
    • “சித்தி” (உத்தர கன்னட மாவட்டத்தில்) என்பவற்றிற்குப் பதிலாக “சித்தி” (பெலகாவி, தார்வாட் மற்றும் உத்தர கன்னட மாவட்டங்களில்) என்பதனைச் சேர்த்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்