அரசியல் மற்றும் வகுப்புவாத நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடுகள்
March 7 , 2026 4 days 81 0
தனியார் பள்ளிகளில் சில செயல்பாடுகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) விதிகள், 2023 ஐ திருத்தியுள்ளது.
தனியார் பள்ளிகள் அரசியல், சித்தாந்தம், வகுப்புவாத அல்லது பிளவுபடுத்தும் தன்மை கொண்ட நிகழ்ச்சிகளை நடத்த அனுமதியில்லை.
எந்தவொரு வெளி நபரோ, சங்கமோ அல்லது அமைப்போ பள்ளி வளாகத்தைப் பயன்படுத்தி கூட்டங்கள், பிரச்சாரங்கள் அல்லது கல்வியுடன் தொடர்பில்லாத செயல்பாடுகளை ஏற்பாடு செய்யக்கூடாது.
மதம், சாதி, இனம், சமூகம், மொழி அல்லது சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒற்றுமையின்மை அல்லது வெறுப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தடை செய்யப் பட்டுள்ளன.
கலாச்சார நிகழ்வுகள், சமூக சேவை திட்டங்கள், இரத்த தான முகாம்கள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆகியவை அரசியல் சாராதவை மற்றும் பிரிவினை சாராதவை என்றால் மட்டுமே அரசாங்கத்தின் முன் அனுமதியுடன் அனுமதிக்கப்படும்.