TNPSC Thervupettagam

அரசு ஊழியர்களுக்கான நலச் சேவைகளுக்கான ஒப்பந்தம்

May 23 , 2025 14 hrs 0 min 19 0
  • தமிழ்நாடு அரசானது, மாநில அரசு ஊழியர்களுக்கு பல்வேறு காப்பீட்டுத் தொகைகள் மற்றும் சலுகைகளை இலவசமாக வழங்குவதற்கு ஒப்புக் கொண்ட ஏழு வங்கிகளுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • பாரத் ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் யூனியன் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
  • ஒப்பந்தத்தின் சில விதிகளாவன:
    • விபத்து காரணமாக மரணம் அல்லது நிரந்தர உறுப்புச் செயல்பாட்டுக் குறைபாடு ஏற்பட்டால் 1 கோடி ரூபாய் தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகை,
    • விபத்தில் உயிரிழந்த அரசு ஊழியரின் மகள்களின் திருமணச் செலவுகளுக்கு 5 லட்சம் ரூபாய் உதவி,
    • விபத்தில் உயரிழந்த அரசு ஊழியரின் இரண்டு மகள்களின் உயர்கல்விக்காக, வங்கிகளால் 10 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படும்,
    • பணியின் போது இயற்கை மரணம் ஏற்பட்டால் 10 லட்சம் ரூபாய் கால ஆயுள் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்