தொழிலாளிகளின் பற்றாக்குறை காரணமாக “அரிசியின் நேரடி விதைப்பை” ஏற்றுக் கொள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் ஊக்கப்படுத்தப் பட்டு வருகின்றனர்.
இந்த முறையில், எந்தவொரு நாற்றுப் பண்ணை ஏற்பாடும் செய்யப் படுவதில்லை.
அதற்கு மாற்றாக, விதைகள் சக்தி வாய்ந்த இழுவை இயந்திரத்தின் உதவியுடன் நிலப் பகுதியில் நேரடியாக விதைக்கப் படுகின்றன.
இது 25% வரை நீரைச் சேமிக்க உதவுகின்றது.
இது உரங்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தித் திறனை ஊக்குவிக்கின்றது.
இதன்மூலம் மண் வளத்திற்கு குறைந்தபட்ச அளவிலான இடர் மட்டுமே ஏற்படுகின்றது.